சிறுவன் கடத்தல் வழக்கு; விசாரணை முடிந்து காரில் கிளம்பிய ஜெயராம்.. கைதா? இல்லையா?

சிறுவன் கடத்தல் வழக்கில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமிடம் விசாரணை முடிந்து புறப்பட்டதால், அவர் கைது செய்யப்பட்டாரா இல்லையா எனும் கேள்வி எழுந்துள்ளது
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண்ணும் காதலித்தனர். இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவிக்க, இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டனர். இந்த விவகாரத்தில், இளைஞரின் தம்பியை ஒரு கும்பல் கடத்தியது.
இதனையடுத்து இளைஞரின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் அந்தக் கும்பலைப் பிடித்துக் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த விவகாரத்தில், கே.வி. குப்பம் அதிமுக எம்.எல்.ஏ.வும், புரட்சி பாரதம் கட்சியின் தலைவருமான பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராம் ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, இந்த வழக்கில் ஜெயராமனை கைது செய்ய காவல்துறை முயன்றபோது, காவல்துறை நடவடிக்கைக்கு அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினரை முற்றுகையிட்டனர். இதனையடுத்து, பூவை ஜெகன்மூர்த்தி தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில், முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராம் ஆகிய இருவரும் ஆஜராயினர். பின்னர் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, பூவை ஜெகன்மூர்த்திக்கு சரமாரி கேள்விகளை எழுப்பினார்.
உங்களுக்கு சில புதிய மற்றும் நேர்மறையான சவால்கள் வரக்கூடும். உங்கள் திறன்களில் நம்பிக்கை வைத்திருங்கள், ஆபத்துக்களை எடுக்க பயப்பட வேண்டாம். தனிப்பட்ட உறவுகளில் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு தொடர்பு முக்கியம், எனவே வெளிப்படையாகப் பேசுங்கள். ஆரோக்கியத்தைப் பற்றி கவனமாக இருப்பது முக்கியம். வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சீரான உணவைப் பின்பற்றுங்கள். இன்று உங்கள் ஆர்வங்கள் மற்றும் பொழுதுபோக்குகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரம், இது உங்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் தரும். அதிர்ஷ்ட எண்: 11 அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
தொடர்ந்து, ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய உத்தரவிட்ட நீதிபதி, பூவை ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனையடுத்து நீதிமன்ற வளாகத்தில் வைத்தே ஏடிஜிபி கைது செய்யப்பட்டு, திருவலாங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தொடர்ந்து அங்கு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், இன்று காலை ஏடிஜிபி இடைநீக்கம் செய்யப்பட்டார். அதே சமயம், திருத்தணிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவரிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டது. பின்னர், இன்று பிற்பகல் 3.30 மணி வாக்கில் அவர் மீண்டும் திருவலாங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்டார். அதேபோல், பூவை ஜெகன்மூர்த்தியிடமும் திருவலாங்காடு காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டுவருகிறார்.
இந்நிலையில், இன்று மாலை 5.50 மணி வாக்கில் ஜெயராமிடம் விசாரணை நிறைவு பெற்ற நிலையில், அவர் காவல் நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்றார். இதனால், அவர் கைது செய்யப்பட்டாரா அல்லது விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டாரா எனும் சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், காவல்துறை தனது சொந்த ஜாமீனில் ஜெயராமனை விடுவித்துவிட்டதா எனும் சந்தேகமும் எழுந்துள்ளது.
அரசியல் முதல் குற்றம் வரை பல தகவல்களை சமீபத்திய செய்திகள், வீடியோக்கள் மற்றும் நிபுணர்கள் சொல்லும் தகவல்களை பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய தமிழ்நாடு செய்திகளின் அப்டேட்டுகளை பெறுங்கள்.
செய்தியாளர் மு.கார்த்திக் புதிய தலைமைச் செய்தி