தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை கொட்டும் - வானிலை மையம்

வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டாரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. பேருந்து நிலையம், பழனி ரோடு, அஞ்சலி ரவுண்டானா, பேகம்பூர், பாலகிருஷ்ணாபுரம், ராமையன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பெய்த மழையால், பள்ளி, மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடியே சென்றனர்.
கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கன மழை பெய்தது. மழையால் நீர் நிலைகள் நிரம்புவதுடன் அருவிகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. தேனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையால் பள்ளிக் குழந்தைகள் நனைந்தவாறு வீடு திரும்பும் நிலை ஏற்பட்டது. வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை கொட்டியது.
மதுரையில் கோரிப்பாளையம், பெரியார் பேருந்து நிலையம், சிம்மக்கல், காளவாசல், பசுமலை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. கீழவாசல் - தெற்குவாசல் இடையேயான சாலையில் முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கி நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக, அண்ணாநகர், நெடும்பலம், ஆலங்காடு, உப்பூர், இடும்பாவனம் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
: கட்சி பணிகளில் வேகம் காட்டும் விஜய்.. தமிழகம் முழுவதும் கொடியை பிரபலப்படுத்த திட்டம்!
திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் சென்ற அரசு பேருந்திற்குள் மழைநீர் கசிந்ததால், பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். இதேபோன்று, நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கனமழை பெய்தது. குறிப்பாக, கொளப்பாடு, வலிவலம், ஆதமங்கலம், சித்தார் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கன மழை பெய்தது. மழையால் நீர் நிலைகள் நிரம்புவதுடன் அருவிகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. தேனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையால் பள்ளிக் குழந்தைகள் நனைந்தவாறு வீடு திரும்பும் நிலை ஏற்பட்டது. வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் காற்றுடன் கூடிய கனமழை கொட்டியது.
மதுரையில் கோரிப்பாளையம், பெரியார் பேருந்து நிலையம், சிம்மக்கல், காளவாசல், பசுமலை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. கீழவாசல் - தெற்குவாசல் இடையேயான சாலையில் முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கி நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக, அண்ணாநகர், நெடும்பலம், ஆலங்காடு, உப்பூர், இடும்பாவனம் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
: கட்சி பணிகளில் வேகம் காட்டும் விஜய்.. தமிழகம் முழுவதும் கொடியை பிரபலப்படுத்த திட்டம்!
திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் சென்ற அரசு பேருந்திற்குள் மழைநீர் கசிந்ததால், பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். இதேபோன்று, நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட திருக்குவளை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கனமழை பெய்தது. குறிப்பாக, கொளப்பாடு, வலிவலம், ஆதமங்கலம், சித்தார் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description