dark_mode
Image
  • Wednesday, 14 May 2025

தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது..!

தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது..!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்த அதி கன மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. டெல்டா பகுதிகளில் வயல்களில் மழைநீர் சூழ்ந்ததால் பயிர்கள் மூழ்கின. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாளையும் நாளை மறுநாளும் சென்னை உள்ளிட்ட இடங்களில் அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. பொதுமக்கள் இன்று இரவிலிருந்து நாளை வரை அத்தியாவசியத் தேவையின்றி வெளியே வர வேண்டாம், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், மத்திய மற்றும் தெற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையானது மேலும் வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் நாளை சென்னை உள்ளிட்ட இடங்களில் அதி கனமழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது..!

comment / reply_from

related_post