ஒரே டெஸ்ட் போட்டியில் 2 சதங்களை விளாசினார் பண்ட்

இங்கி.,க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸிலும் இந்திய துணை கேப்டன் ரிஷப் பண்ட் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். முதல் இன்னிங்ஸில் 178 பந்துகளில் 134 ரன்களை விளாசிய அவர், 2-வது இன்னிங்ஸில் 130 பந்துகளில் சதம் அடித்து களத்தில் கெத்தாக நிற்கிறார். 4-வது நாளான இன்று, தற்போது வரை 3 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 304 ரன்களுடன் முன்னிலையில் உள்ளது.