dark_mode
Image
  • Sunday, 15 June 2025

கல்வி நிதி தர மறுக்கும் வழக்கு: தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்ற உத்தரவு..!

கல்வி நிதி தர மறுக்கும் வழக்கு: தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்ற உத்தரவு..!
தமிழக அரசு தாக்கல் செய்த கல்வி நிதி தொடர்பான மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டு அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.
 
 
மத்திய அரசிடம் இருந்து பெறவேண்டிய கல்வித் தொகையை தொடர்ந்து தாமதப்படுத்தி வருவதாக தமிழக முதல்வரும், பல்வேறு அமைச்சர்களும் குற்றச்சாட்டு வைக்கிறார்கள்.
 
மத்திய அரசு சார்பில் அமைச்சர் தர்மேந்திர பிரதான், “புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை நிதி வழங்கப்படாது” எனத் தெளிவாக கூறியுள்ளார். இதனையடுத்து, தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தை நாடியுள்ளது.
 
 
சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் ரூ.2,151.59 கோடியும், அதற்கான 6% வட்டி ரூ.139.70 கோடியும், மொத்தமாக ரூ.2,291 கோடி வழங்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு கடந்த மாதம் மனு தாக்கல் செய்தது.
 
இந்த நிதி நிறைவேற்றப்படாமலே தாமதிக்கப்படுவதால், மாநிலம் முழுவதும் சுமார் 43 லட்சம் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளதால், இந்த வழக்கு விரைவில் விசாரிக்கப்பட வேண்டும் என திமுகவின் வழக்கறிஞர் பி. வில்சன் வலியுறுத்தினார்.
 
ஆனால் நீதிபதிகள் பி. கே. மிஸ்ரா மற்றும் மன்மோகன் தலைமையிலான அமர்வு, இது அவசர வழக்காக கருதப்பட முடியாது என்றும், விரைந்து விசாரணை மேற்கொள்ள தேவையில்லை என்றும் கூறி மனுவை நிராகரித்தது.
 

related_post