dark_mode
Image
  • Sunday, 15 June 2025

இன்று ஆமதாபாத் விரைகிறார் பிரதமர் மோடி!

இன்று ஆமதாபாத் விரைகிறார் பிரதமர் மோடி!

புதுடில்லி: குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் விமான விபத்துக்குள்ளான பகுதியை பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.
 

நேற்று மதியம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கிளம்பிய ஏர் இந்திய விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. நாட்டையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்பட 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே அதிர்ஷ்டவசமாக விமானத்தில் இருந்து குதித்து உயிர் தப்பியுள்ளார்.

மருத்துவ கல்லூரி மீது விமானம் மோதியதில் சில கல்லூரி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 265ஆக அதிகரித்துள்ளது. மேலும், பலத்த காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோர், விபத்து நடந்த பகுதியில் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில், விமான விபத்து நடந்த பகுதியில் ஆய்வு செய்வதற்காக பிரதமர் மோடி இன்று ஆமதாபாத் செல்கிறார். அப்போது, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

related_post