dark_mode
Image
  • Tuesday, 09 September 2025

நேபாளம் சென் இசட் இளைஞர்கள் வன்முறை: கண்டதும் சுட உத்தரவு- உச்சகட்ட பதற்றத்தில் உள்ளூர் மக்கள்... அடுத்து என்ன நடக்கும்?

நேபாளம் சென் இசட் இளைஞர்கள் வன்முறை: கண்டதும் சுட உத்தரவு- உச்சகட்ட பதற்றத்தில் உள்ளூர் மக்கள்... அடுத்து என்ன நடக்கும்?

நேபாளத்தை சேர்ந்த 2கே கிட்ஸ் வன்முறையில் ஈடுபட்டுள்ளனா். அவர்களை கட்டுப்படுத்த கண்டதும் சுட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

நேபாளத்தில் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கையை எதிர்த்து, நாடு முழுவதும் பரவலான போராட்டம் வெடித்துள்ளது. இதனால் நாடு தற்போது உச்சக்கட்ட பதற்றத்தில் சிக்கியிருக்கிறது. இந்த நிலையில் ராணுவம் குவிக்கப்பட்டு சுட்டு தள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் நேபாள அரசு வாட்ஸ் அப், பேஸ்புக் உட்பட மொத்தம் 26 சமூக ஊடக நிறுவனங்களின் சேவையை நிறுத்த உத்தரவிட்டது. அரசின் நிலைப்பாடு என்னவெனில், இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஒருவரை நியமித்து, வாரந்தோறும் அரசுக்கு அந்த நிறுவனத்தில் நடைபெறும் விவாதங்களை அறிக்கையாக அளிக்க வேண்டும் என்பதாகும். டிக்டாக் போன்ற சில நிறுவனங்கள் இதை ஏற்றுக்கொண்டன. ஆனால் பெரும்பாலான நிறுவனங்கள் அரசின் நிபந்தனையை பின்பற்றாததால், நேபாள அரசு திடீரென சேவைகளை நிறுத்தி வைத்தது.

 

காத்மண்டு போராட்டம்

இந்த நடவடிக்கையால் பெரும்பாலும் இளைஞர்கள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். "சமூக ஊடக சுதந்திரத்தை பறித்துவிட்டது ஜனநாயகத்திற்கு எதிரான செயல்" என குற்றம்சாட்டிய அவர்கள், அரசு நடவடிக்கைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காத்மாண்டுவை மையமாக கொண்டு நாடு முழுவதும் பரவியது.

போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைய முயன்றனர். மேலும் போலீசாரின் மீது கற்கள் வீசினர், சிலர் துப்பாக்கியையும் பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். பின்னர் நிலைமை மேலும் மோசமாகி, ராணுவமும் களமிறங்கியது. இந்த மோதலின் போது கிளர்ச்சியாளர்களில் ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. பலர் காயமடைந்துள்ளனர். இதனால் நேபாளத்தில் நிலைமை மேலும் பரபரப்பாக மாறியுள்ளது.

மன்னராட்சி போராட்டம்

அரசு தரப்பில் விளக்கம் அளித்த அதிகாரிகள், "மன்னராட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்கிற பழமைவாத சிந்தனையால் தூண்டப்பட்ட சில குழுக்கள் தான் இந்த போராட்டத்தை நடத்துகின்றன. ஜனநாயகத்திற்கு எதிரான இந்த முயற்சியை அரசு ஒருபோதும் ஏற்காது" என தெரிவித்தனர்.

ஆனால் விமர்சகர்கள், "கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் இருக்கும் நேபாளத்தை கவிழ்க்க வெளிநாட்டு வலதுசாரி நாடுகள் முயற்சி செய்கின்றன. இதற்காக கிளர்ச்சியாளர்கள் தூண்டப்படுகிறார்கள்" என குற்றஞ்சாட்டினர். நிலமை தீவிரமடைந்ததை தொடர்ந்து காத்மாண்டுவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முக்கிய இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. "கண்டதும் சுட" என்ற உத்தரவும் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நேபாள மக்களின் அன்றாட வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. பள்ளிகள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சமூக ஊடக தடை, அரசின் கடுமையான நடவடிக்கை, கிளர்ச்சியாளர்களின் அதிருப்தி, ராணுவம்-போலீஸ் நடவடிக்கைகள் – இவை அனைத்தும் சேர்ந்து நேபாளத்தை அரசியல் ரீதியாக அதிரவைத்து வருகின்றன.

மேலும் காத்மண்டுவில் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் போராட்டத்தில் ஈடுபடுவோரை கண்டதும் சுடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட வன்முறையை போல் தற்போது நேபாளத்திலும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உலக நாடுகள் இதனை தீவிரமாக கவனித்து வருகின்றன.
 

related_post