🌻 🌷 🌹 11 நவம்பர் 🌹 🌷 🌻 † 📖 நற்செய்தி வாசகம் 📖 †

11 நவம்பர் 2021, வியாழன்
பொதுக்காலம் 32ஆம் வாரம் - வியாழன்
நற்செய்தி வாசகம்
இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 20-25
அக்காலத்தில்
இறையாட்சி எப்போது வரும் என்று பரிசேயர் இயேசுவிடம் கேட்டனர். அவர் மறுமொழியாக, “இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது. இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே! எனச் சொல்ல முடியாது. ஏனெனில், இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது” என்றார்.
பின்பு அவர் சீடர்களை நோக்கிக் கூறியது: “ஒரு காலம் வரும்; அப்போது மானிட மகனுடைய நாள்களில் ஒன்றையாவது காண நீங்கள் ஆவலாய் இருப்பீர்கள். ஆனால் நீங்கள் காணமாட்டீர்கள். அவர்கள் உங்களிடம், ‘இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே!’ என்பார்கள். ஆனால் நீங்கள் போக வேண்டாம்; அவர்களைப் பின்தொடரவும் வேண்டாம். வானத்தில் மின்னல் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் வரைக்கும் பளீரென மின்னி ஒளிர்வது போல மானிட மகனும் தாம் வரும் நாளில் தோன்றுவார்.
ஆனால் முதலில் அவர் பல துன்பங்கள் பட்டு இந்தத் தலைமுறையினரால் உதறித் தள்ளப்பட வேண்டும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description