dark_mode
Image
  • Thursday, 21 August 2025

இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் திருச்சி சிவா? பரபரப்பு தகவல்..!

இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் திருச்சி சிவா? பரபரப்பு தகவல்..!
இந்திய துணை குடியரசு தலைவர் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பா.ஜ.க. மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் ஒரு தமிழர் என்பதால், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
 
இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக, 'இந்தியா' கூட்டணியின் துணை குடியரசு தலைவர் வேட்பாளராக தி.மு.க.வை சேர்ந்த திருச்சி சிவாவை நிறுத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு எதிராக திருச்சி சிவாவை நிறுத்துவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இது குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக, டெல்லியில் உள்ள கார்கே இல்லத்தில் 'இந்தியா' கூட்டணியின் தலைவர்கள் இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு, எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு குறித்து ஒரு தெளிவான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
 
இந்தப் போட்டி, தேசிய அளவில் ஒரு தமிழர் துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு வருவதற்கான வாய்ப்பை உருவாக்குவதோடு, இரு கூட்டணிகளின் அரசியல் வலிமையையும் சோதிப்பதாக அமையும்.

related_post