dark_mode
Image
  • Thursday, 21 August 2025

த.வெ.க.வின் கொடி வழக்கு: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு – கொண்டாட்டத்தில் தொண்டர்கள் !

த.வெ.க.வின் கொடி வழக்கு: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு – கொண்டாட்டத்தில் தொண்டர்கள் !

சிவப்பு ,மஞ்சள் நிறத்தில் கொடியை பயன்படுத்த தவெகவிற்கு தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூலை 14ஆம் தேதி தொண்டை மண்டலச் சான்றோர் தர்மப் பரிபாலனச் சபையின் நிறுவனர் பச்சையப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி சிவப்பு, மஞ்சள் உள்ளிட்ட நிறங்கள் தொண்டை மண்டலச் சான்றோர் தர்மப் பரிபாலனச் சபையின் கொடியின் நிறத்தைப் போன்ற உள்ளது. முதலில் இந்தக் கொடியை நாங்கள்தான் அறிமுகம் செய்தோம். இதனால் தொண்டர்களுக்குள் குழப்பம் ஏற்படுகிறது. மேலும் கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழகப் பத்திரப்பதிவு மூலம் அதிகாரப் பூர்வமாகக் கட்சியின் கொடி வெளியிடப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி

மேலும் இதற்கான சான்றிதழ்களையும் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழக வெற்றிக் கழக கொடியில் இருக்கும் நிறங்களைப் பயன்படுத்தத் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. பொது இந்த மனுவிற்குத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

 

தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை

அப்போது பச்சையப்பன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,’’ தொண்டை மண்டலச் சான்றோர் தர்மப் பரிபாலனச் சபையானது வணிகர் சின்னமாகப் பதியப்பட்டுள்ளது. மேலும் வணிகச் சின்ன சட்டத்தையும், பதிப்புரிமைச் சட்டத்தை மீறி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் இரண்டு கட்சிகளின் கொடிகளும் ஒரே மாதிரியாக இருப்பதனால் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இடம் பெற்றுள்ள மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தைப் பயன்படுத்தத் தடை செய்ய வேண்டும் என்று தொண்டை மண்டலச் சான்றோர் தர்மப் பரிபாலனச் சபை தரப்பில் வலியுறுத்தப்பட்டது.


த.வெ.க. கொடியை பயன்படுத்த தடையா?

இதனையடுத்து தவெக தரப்பில்,’’ஆஜரான வழக்கறிஞர் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி எந்த வர்த்தகத்திலும் ஈடுபடவில்லை. மேலும் கட்சிக் கொடி மீது உரிமை கோர முடியாது. குறிப்பாக தவெக மற்றும் தொண்டை மண்டலச் சான்றோர் தர்மப் பரிபாலனச் சபை உள்ளிட்ட இரண்டு கட்சிக் கொடிகளுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன இவை எந்த வகையிலும் ஒத்துப் போகவில்லை’’ என்று வலியுறுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து, இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி இரு கட்சிகளின் கொடிகளை ஒப்பிடும் பொழுது தமிழக வெற்றிக் கழகம் தொண்டை மண்டலச் சபை கொடியைப் பயன்படுத்தியதாகக் கூறமுடியாது.

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

குறிப்பாக மக்கள் மத்தியில் தமிழகம் வெற்றிக் கழகத்தின் கொடி குழப்பத்தை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது. மேலும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் உள்ள சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தை அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தத் தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்தார்.இதனை அடுத்து தொண்டை மண்டலச் சான்றோர் தர்ம பரிபாலனச் சபை தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் மேலும் இந்த வழக்கிற்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி உத்தரவிட்டார் இதனால் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
 

related_post