பிரதமர் மோடி ஜூலை 2-ந் தேதி வெளிநாடு பயணம்-பிரேசிலில் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கிறார்!

பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 2-ந் தேதி முதல் பிரேசில் நாட்டில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக செல்கிறார். மேலும் 5 நாடுகளுக்கும் அவர் பயணம் செய்கிறார்.
பிரிக்ஸ் மாநாட்டிற்காக பிரேசில் பயணம்
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் பிரேசில் செல்கிறார். செல்லும் வழியில் கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கும், திரும்பும் வழியில் நமீபியாவுக்கும் செல்கிறார். இந்த பயணத்தில், உலகளாவிய பிரச்சினைகள், பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு பயன்பாடு, பருவநிலை மாற்றம் குறித்து விவாதிக்கிறார். மேலும், பிரேசில் அதிபருடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அர்ஜென்டினாவுடனான உறவை வலுப்படுத்தவும் இந்த பயணம் உதவுகிறது.
முதல் முறையாக செல்லும் பிரதமர் மோடி
பிரதமர் மோடியின் இந்த பயணம் கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, நமீபியா ஆகிய நாடுகளுக்கு அவர் முதல் முறையாக செல்வது குறிப்பிடத்தக்கது. பிரிக்ஸ் மாநாட்டில், உலக நிர்வாக சீர்திருத்தங்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு, பலதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், செயற்கை நுண்ணறிவின் பொறுப்பான பயன்பாடு, பருவநிலை மாற்றம், உலகளாவிய சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் நிதி விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வார் என்று அரசு தெரிவித்துள்ளது.
இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சு
மாநாட்டின் இடையே, பிரதமர் மோடி பல நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசுகிறார். பிரேசில் அரசுமுறை பயணத்தின்போது, பிரேசிலியா நகரில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவை சந்தித்து பேசுகிறார்.
பாதுகாப்பு தொடர்பான பேச்சு வார்த்தை
அப்போது, வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி, தொழில்நுட்பம், விவசாயம், சுகாதாரம் மற்றும் மக்கள் தொடர்பு போன்ற பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கின்றனர். "இரு நாடுகளுக்கு இடையேயான மூலோபாய கூட்டாண்மையை விரிவுபடுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்" என்று அரசு கூறியுள்ளது.
இந்தியா -அர்ஜெண்டினா உறவு
அர்ஜென்டினாவுடனான உறவை மேம்படுத்தும் நோக்கில், பாதுகாப்பு, விவசாயம், சுரங்கம், எண்ணெய் மற்றும் எரிவாயு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு போன்ற முக்கிய துறைகளில் இந்தியா-அர்ஜென்டினா உறவை வலுப்படுத்த இந்த பயணம் உதவும் என்று அரசு தெரிவித்து உள்ளது.
5 நாடுகளுக்கு இடையேயான உறவு
இந்த பயணத்தின் மூலம், இந்தியாவுக்கும் இந்த ஐந்து நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியின் பங்களிப்பு உலகளாவிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவும்.
முதல் முறை பயணம்
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று உள்ளார். ஆனால் முதன் முறையாக பல்வேறு நாடுகளுக்கு செல்ல உள்ளார். இதன் மூலம் இந்தியாவின் பெருமை பல்வேறு நாடுகளுக்கு தெரிய வாய்ப்பு உள்ளது. மேலும் அந்நாட்டின் கலாச்சாரம் மற்றும் வளர்ச்சியும் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் வளர்ச்சியும் பல்வேறு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் போது தெரிய வரும்.