dark_mode
Image
  • Saturday, 28 June 2025

ஈரான் தலைவர் நன்றியற்றவர்; படுகொலையில் இருந்து காப்பாற்றினேன்; டிரம்ப்

ஈரான் தலைவர் நன்றியற்றவர்; படுகொலையில் இருந்து காப்பாற்றினேன்; டிரம்ப்

ஈரான் தலைவர் நன்றியற்றவர். அவரை படுகொலையில் இருந்து காப்பாற்றினேன்'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தத்திற்கு பிறகு, ''அமெரிக்காவின் முகத்தில் ஈரான் அறைந்துள்ளது. அமெரிக்கா தலையிடாவிட்டால் இஸ்ரேல் அழிந்து இருக்கும். இதனை உணர்ந்ததால் தான் அமெரிக்க இந்த போரில் தலையிட்டது'' என ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியிருந்தார்.

இது தொடர்பாக செய்தி சேனலுக்கு, அதிபர் டிரம்ப் அளித்த பேட்டி: ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனியை படுகொலையில் இருந்து காப்பாற்றினேன். அவர் நன்றியில்லாமல் இருக்கிறார். அணு ஆயுதங்களை தயாரிக்க முயன்றால், ஈரானில் குண்டுகள் வீச உத்தரவிடுவேன்.

அவர் (அயதுல்லா அலி கமேனி ) எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார் என்பது எனக்கு சரியாகத் தெரியும். உலகின் மிகப் பெரிய மற்றும் சக்திவாய்ந்த இஸ்ரேல் அல்லது அமெரிக்க ஆயுதப் படைகள் அவரது வாழ்க்கையை முடிக்க அனுமதிக்க மாட்டேன். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.

குறைக்க விரும்புகிறேன்

இது குறித்து நிருபர்களிடம் டிரம்ப் கூறியதாவது: ஜூலை 9ம் தேதி அமெரிக்க வரிகளை மீண்டும் விதிப்பதற்கான காலக்கெடு நெகிழ்வானது. வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் எவ்வாறு முன்னேறுகின்றன என்பதைப் பொறுத்து அது மாறக்கூடும்.

நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதை நீட்டிக்கலாம். அதைக் குறைக்கலாம். நான் அதைக் குறைக்க விரும்புகிறேன். அனைவருக்கும் கடிதங்களை அனுப்ப விரும்புகிறேன். இவ்வாறு டிரம்ப் கூறினார்.

related_post