📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 11-11-2021 வியாழக்கிழமை

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இருவருடைய கப்ருகளைத் கடந்து நபி(ஸல்) அவர்கள் சென்றபோது, 'இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள்; ஆனால் மிகப் பெரும் பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது மறைக்காதவர்; இன்னொருவர் கோள் சொல்லித் திரிந்தவர்' எனக் கூறிவிட்டு, ஈரமான ஒரு பேரீச்ச மட்டையை இரண்டாகப் பிளந்து இரண்டு கப்ருகளிலும் ஒவ்வொன்றை நட்டார்கள். தோழர்கள், 'இறைத்தூதர் அவர்களே! ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?' என்று கேட்டதும், 'இவ்விரண்டின் ஈரம் காயாதவரை இவர்களின் வேதனை குறைக்கப்படக்கூடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 1361.
அத்தியாயம் : 23. ஜனாஸாவின் சட்டங்கள்

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description