dark_mode
Image
  • Saturday, 14 June 2025

"எடப்பாடி பழனிசாமியை தூக்கி எறிந்தால்தான் அதிமுக வளர முடியும்" - பண்ருட்டி ராமச்சந்திரன்

டப்பாடி பழனிசாமி என்ற தனிநபரை தூக்கி எறிந்தால்தான் அதிமுக வளர முடியும் என பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகளும் வெற்றி பெற்றுள்ளனர். சுமார் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது: எடப்பாடியும் அவரது ஆதரவாளர்களும் ஒற்றுமை நிலைக்கு உலை வைத்தார்கள். ஓபிஎஸ்யையும் கட்சியின் முன்னாள் உறுப்பினர்களையும் உதாசீனப்படுத்தினார்கள். இரட்டை இலை சின்னம் தேர்தல் கமிஷன் மூலம் கிடைத்தால் போதும் என்று எடப்பாடி பழனிச்சாமி எடுக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தோம். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு டெபாசிட் பெற்றது மட்டுமே ஆறுதலாக உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆன பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தொடர்ந்து தோல்வியே வெற்றி வருகிறது கட்சி. ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த இயக்கம் மேலும் வளர வேண்டும் என்றால் ஒன்று சொல்கிறோம் 'ஒன்று பட்டால் உண்டு வாழ்வு'. கழகத் தொண்டர்களும் ஆதரவாளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளார்கள், பொதுமக்கள் வாக்களிக்கவில்லை. அதுதான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. ஒன்றுபட்டு பாடுபட்டால் கட்சி முன்னேற்ற முடியும் என்பதுதான் துவண்டு போய் உள்ள அதிமுக தொண்டர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்வது. இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

இடைத்தேர்தல் வெற்றி என்பது நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக அமைகிறது என்ற முதலமைச்சரின் கருத்துக்கு பதிலளித்த, முதல்வருக்கு இப்படிப்பட்ட நம்பிக்கையை ஏற்படுத்திய எடப்பாடிக்குதான் நன்றி சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார். பொதுமக்களை ஈர்க்கக்கூடிய திட்டமோ கொள்கையோ முன்வைக்கப்படவில்லை. எடப்பாடியின் பிரச்சாரம் பொதுமக்களிடம் எடுபடவில்லையா என்ற கேள்விக்கு எடப்பாடியே எடுபடவில்லை என்ற பண்ருட்டி ராமச்சந்திரன் பதில் அளித்தார்.

related_post