ரஷ்யாவை முடக்க வரியால் மிரட்டும் டிரம்ப்

வாஷிங்டன்: டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதில் இருந்து வரி விதிப்பில் கடும் கெடுபிடிகளை கடைப்பிடிக்கிறார். இந்தியா உட்பட பல நாடுகள் மீதும் பரஸ்பர வரியை விதித்தார். தற்போது அந்த வரி விதிப்பை டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார்.
இந்த நிலையில்,ரஷ்யாவுடன் வர்த்தகத்தைத் தொடரும் நாடுகளுக்கு 500 சதவிகிதம் வரி விதிக்கும் புதிய மசோதா அமெரிக்காவில் முன்மொழியப்பட்டுள்ளது.
ரஷ்யாவை பொருளாதார ரீதியில் முடக்க அமெரிக்கா இந்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மசோதா ஆகஸ்டில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மசோதா நிறைவேறினால், தள்ளுபடி விலையில் ரஷியாவிடம் கச்சா எண்ணெயை அதிகளவில் வாங்கக்கூடிய இந்தியா, சீனா அதிகளவில் பாதிக்கப்படக்கூடும்.
அதாவது, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா 500 சதவீதம் அளவுக்கு வரி விதிக்க கூடும். இந்தியாவும், சீனாவும் 70 சதவிகிதம் அளவுக்கு கச்சா எண்ணெய் கொள்முதலை ரஷ்யாவிடம் இருந்தே செய்கின்றன.